Tuesday, December 19, 2006

தமிழ் சினிமா பட பெயரை தமிழில் வைத்தால் வரிவிலக்கு!!!

முதல்ல ஒரு விளக்கம்: என்னடா இது, தமிழ் சினிமா பட பெயரை தமிழில் வைத்தால் வரிவிலக்கு என்கிற எப்பவோ முடிஞ்ச மேட்டருக்கு இப்ப பதிவு போடறானேன்னு திட்டாதீங்க. சோம்பேறித் தனம் அதிகமாப் போச்சு. கருத்து சொல்லியும் அலுப்பா இருக்கு. அதனாலே பதிவு போட்டே ரொம்ப நாளா ஆச்சு. ஆனாலும் ரவி, மதுசூதனன் இரண்டு பேருமே தங்கள் பதிவில் ரொம்பவும் ஃபீலிங்காக இது கருத்து சொல்லியிருந்தார்கள். சரி, ஆறுதலாக பின்னூட்டம் போடலாம் என்று கிளம்பி கடைசியில் அது ரொம்ப நீளமாக, சரி ஓய்ந்து கிடக்கிற நம்ம பதிவுக்கும் உயிர் கொடுப்போம்னு அப்படியே பதிவாப் போட்டுட்டேன்.அதனால் இந்த பதிவே அவர்கள் பதிவிற்கு இட்ட பின்னூட்டம் தான்.

சரி, இனி விஷயம்:

இந்த விஷயத்தில் வருத்தம் வெளியிடும் பலரும் இதில் இருக்கும் ஒரு முக்கிய பிண்ணனியை மறந்து விடுகிறார்கள்.

இதில் சினிமாக்காரர்களை பகைத்துக் கொள்ளக் கூடாது என்பது மட்டுமே நோக்கமில்லை. மருத்துவர் அய்யாவின் தொல்லை தந்திரங்களில் இருந்து தப்பிப்பதற்காகத் தான் இந்த முடிவையே கலைஞர் எடுத்திருக்க வேண்டும் என்பது என் கருத்து.

ஏற்கனவே போராட்டங்களை அதிகரிப்பதும்,அதன் மூலம் அசம்பாவிதங்களுக்கு வலை விரிப்பதும், அதன் பின் சட்ட ஒழுங்கு சரியில்லை என்று குரல் கொடுப்பதும் அரசினை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் தீட்டும் சதித்திட்டத்தின் ஒரு பகுதி என்று கலைஞருக்கு ஒரு பதட்டம் இருந்து கொண்டு தான் இருக்கிறது. வன்முறை அதிகரித்து விட்டது என்று பல மீடியாக்களில் செய்தி வருவதும் அந்த பதட்டத்தை அவருக்கு அதிகரிக்கிறது. அதனால் தான் உள்ளாட்சி தேர்தல் வன்முறைக்கு சால்ஜாப்பு சொல்வதிற்கு அவர் ரொம்பவும் மெனக்கெட வேண்டியிருந்தது.

அவரது துரதிர்ஷ்டம், கூட்டணியில் இருக்கும் எந்த கட்சியுமே அவருக்கு மன நிம்மதி அளிக்கும் விதத்தில் செயல்பட தயாராக இல்லை. எல்லோரும் பிளாக்மெயில் தந்திரத்தை உபயோகிப்பதால், ஒரு போர்க்கொடி செய்தியும், பிறகு மறப்போம் மன்னிப்போம் செய்தியும் கூட்டணிக் கட்சிகளிடையே வழக்கமாகி விட்டது. இந்த நிலையில் ராமதாஸ் மற்றும் திருமாவளவன் கைகோர்த்து நடத்தி வந்த இந்த 'தமிழ் காப்பு போராட்டம்' தனக்கு மிகுந்த சங்கடத்தை தரக்கூடும் என்பதும் அவருக்கு தெரியும். அவர்களை சமாதானப்படுத்துவது என்பது ஆகிற காரியமில்லை என்பதால், சினிமாக்காரர்கள் மறுக்கவே முடியாது என்னும் வகையிலான இந்த ஆஃபரை எடுத்து விட்டார் கலைஞர்.

சரி, இந்த ஆண்டு மட்டுமே 100 கோடிக்கும் மேலாக அரசாங்கத்திற்கு போக வேண்டிய, மக்கள் நலத் திட்டங்களுக்கு செலவிடப்பட வேண்டிய வரிப்பணம் பண முதலைகளிடமே திருப்பி விடப்பட்டு விடுகிறதே, இது மக்கள் விரோதம் இல்லையா?

தமிழ்த் திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் வரி விலக்கு என்பது கேலிக்கூத்தாக இருக்கிறது என்பது அரசு நிர்வாகத்திற்கோ கலைஞருக்கோ தெரியாதா? இல்லை பலர் ஃபேஷனாக ஆங்கிலப் பெயரை சூட்டுகிறார்கள் என்றால், தமிழ்ப் படங்களுக்கு வேற்றுமொழியில் பேர் வைத்தால் வரி அதிகமாகச் செலுத்த வேண்டிவரும் என்றும் இதனை கட்டுக்குள் கொண்டுவரலாமே?

சினிமா மக்களை சீரழிக்கிறது என்று படப்பெட்டிகளை சேஸ் செய்த அரசியல் கட்சியினர், மக்கள் நலத்திற்கு செலவிடப்பட வேண்டிய கோடிக்கணக்கான வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது என்று குரல் கொடுக்கவும் இல்லை, இது போற்றப்படவேண்டிய திட்டம் என்று பாராட்டுப் பத்திரமும் வாசிக்கவில்லையே?

இப்படியெல்லாம் நீங்கள் கேட்பீர்களானால் ஐயோ பாவம், லாஜிக் தெரிந்த அளவுக்கு இந்த மனுசனுக்கு அரசியல் தெரியலையே என்று உங்கள் மேல் பரிதாபப்படத் தான் முடியும். இதற்குப் பேர் தான்ப்பா அரசியல்ல 'ராஜதந்திரம்'. இதெல்லாம், கம்யூனிஸ்டுகள், காங்கிரஸ், பாமக என்று சூப்பர் கூட்டணிகட்சிகளின் ஆதரவோடு ஆட்சியில் இருந்தாத் தெரியும்.

ஐய்யோ, ஐய்யோ, இன்னும் சின்னப்புள்ளத் தனமாவேவா பேசிக்கிட்டிருக்கிறது!

Wednesday, April 05, 2006

லஷ்மி மிட்டல் முயற்சி வெல்லுமா?

அயல் நாடு வாழ் இந்தியரான லஷ்மி மிட்டல் ஆர்ஸலர் நிறுவனத்தை கையகப்படுத்த முயல்வது குறித்த கட்டுரை வெப் உலகத்தில் வெளியாகியுள்ளது. அதனை இங்கே கொடுத்திருக்கிறேன். படித்து விட்டு அபிப்பராயம் சொல்லுங்கள்.
நன்றி ::
வெப் உலகம்

லஷ்மி மிட்டல் முயற்சி வெல்லுமா?

லக்ஸம்பர்கில் இருந்து செயல்படும் இரும்பு எஃகு நிறுவனமான ஆர்ஸலர் நிறுவனத்தை லண்டன் மற்றும் நெதர்லாண்ட்ஸினை தலைமையகமாக கொண்டு செயல்படும் வெளிநாட்டு இந்தியர் லஷ்மி மிட்டலின் (உலக பணக்காரர்கள் வரிசையில் 5வது இடத்தில் இருப்பவர்) நிறுவனம் கையகப்படுத்த முயற்சிக்க ஐரோப்பிய நாடுகளில் இப்போது சர்ச்சை எழுந்திருக்கிறது. உலகமயமாக்கப்பட்ட பொருளாதாரத்தில் ஒரு நிறுவனம் மற்றொரு நிறுவனத்தை இணைத்து கொள்வதோ அல்லது கையகப்படுத்துவதோ அன்றாடம் நிகழும் சாதாரண நிகழ்வாகி விட்டது. இந்த சூழலில் மிட்டலின் இந்த முயற்சிக்கு ஐரோப்பிய நாடுகளில் கடும் எதிர்ப்பு எழுவதன் காரணம் என்ன? மிட்டல் இந்த முயற்சியில் அளவு கடந்த ஆர்வம் காட்டுவது ஏன்? மிட்டலின் முயற்சி வெற்றி பெறுமா?

இந்த துறையின் வித்தியாச அம்சம்:

இரும்பு எஃகு துறை உலகின் முதன்மையான பிளவுபட்ட துறையாகும். மற்ற துறைகளில் எல்லாம் முதல் பெரிய 10 நிறுவனங்கள் 90 சதவீதத்திற்கும் மேல் சந்தை பங்கினை கையில் வைத்திருக்கும் வேளையில் இத்துறையில் மட்டும் முதல் 10 பெரிய கம்பெனிகள் சேர்ந்தாலும் 15 சதவீதத்திற்கும் கீழ் தான் மொத்த சந்தை மதிப்பில் கொண்டுள்ளன. இந்த துறையில் கடந்த பல பத்தாண்டுகளாக தனிநிறுவன வளர்ச்சி , விரிவாக்கம், சந்தை பங்கினை அதிகப்படுத்துதல் என்பதையே நிறுவனங்கள் செய்ய முடியாது இருந்தது. இதன் முக்கிய காரணம் இந்த துறையில் வளர்ச்சிக்கான எதிர்பார்ப்பு 10 ஆண்டுகளுக்கு முன்பு குறைவாக இருந்தது. மிகப்பெரிய நிறுவனங்களும் இல்லை. இதில் மிட்டல் எப்படி உள்ளே வந்தார்?

லஷ்மி மிட்டல் நிறுவனம் :

கல்லூரிக்கு பின் கல்கத்தாவில் தனது தந்தை வைத்திருந்த சிறிய இரும்பு நிறுவனத்திலேயே ஆரம்பத்தில் தனது பணியை துவக்கிய மிட்டல் இந்தியாவில் இரும்பு நிறுவன வளர்ச்சிக்கு நிறைய தடைகள் இருப்பதாக கருதி தனது தந்தையின் ஆதரவுடனேயே 1970களில் இந்தோனேசியாவில் தனது நிறுவனத்தை துவக்கினார். இரும்பு எஃகு உற்பத்தி நிறுவனங்களின் சிதறுண்டு கிடந்த தன்மையை பார்த்து இத்துறையில் வளர்ச்சிக்கு மிகப்பெரிய வாய்ப்பிருப்பதை கண்டு கொண்டார்.

சோவியத் ரஷ்யா சிதறுண்டதற்கு பிறகு கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பா நாடுகளில் கடனில் தத்தளித்து கொண்டிருந்த இரும்பு ஆலை நிறுவனங்களை 90களில் கையகப்படுத்தினார். நிர்வாக திறமையின்மையால் பணியாளர்களுக்கு ஊதியம் கொடுக்க கூட முடியாமல் திண்டாடி கொண்டிருந்த புதிய அரசுகள் சந்தோஷமாக மிட்டல் நிறுவனத்திடம் விற்று விட்டு ஒதுங்கி கொண்டன. மேற்கு ஐரோப்பிய நாடுகளும் இந்த விஷயத்தை அவ்வளவாக கண்டு கொள்ளாமல் விட்டு விட்டன. இந்த நிறுவனங்களை கையகப்படுத்தியதின் மூலம் மிட்டல் நிறுவனத்திற்கு கடன் அதிகரித்தது என்பது உண்மை. ஆனால் அந்த பிரச்சினையை உயர்ந்து கொண்டிருந்த இரும்பு எஃகின் விலை, அதிகரித்த உற்பத்தி திறன், குறைவான வட்டி விகிதம் இவற்றை கொண்டு சமாளித்து விட்டார் மிட்டல். இப்போதும் கூட மிட்டல் நிறுவன பங்கு ஒன்றின் புக் வேல்யூவான 14.42 டாலருக்கு 11.44 டாலர் நீண்டகால கடன் இருப்பது குறிப் பிடத்தக்கது.

தற்போது நெதர்லாண்ட்ஸ் மற்றும் லண்டனில் தலைமையகம் இருக்கும் மிட்டல் நிறுவனத்திற்கு கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, கரீபியன் என உலகின் அத்தனை பகுதிகளிலும் ஆலை இருக்கிறது. 175000 பேர் உலகமெங்கும் இவரது நிறுவன பணியாளர்கள்.

ஆர்ஸலர் நிறுவனம் :

பிரான்ஸின் யூசினார், லக்ஸம்பர்கின் ஆர்பெட் மற்றும் ஸ்பெயினின் ஏஸ்ரேலியா இந்த மூன்று நிறுவனங்களும் இணைந்து தான் 10 பில்லியன் டாலர் ஆர்ஸலர் நிறுவனமே உருவாகியது. 2004 வரை இந்த நிறுவனமே உலகின் மிகப்பெரிய இரும்பு உருக்கு நிறுவனமாகவும் இருந்தது. அதற்கு பிறகு இப்போது மிட்டல் நிறுவனம்
முதலிடத்தை பிடிக்க இது இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. தற்போது இந்த நிறுவனத்தின் முதன்மை அதிகாரி கை டாலி ஆசியாவிலும் வடக்கு அமெரிக்காவிலும் விரிவாக்க பணிகளை திட்டமிட்டு வருகிறார்.

இந்த நிறுவன அமைப்பின் முக்கிய அம்சமே ஐரோப்பிய அரசுகளின் பங்கு இந்த நிறுவன நிர்வாகத்தில் இருப்பது தான். அவற்றில் லக்ஸம்பர்க் அரசு அதிக பங்குகளை கொண்டுள்ளது. எனவே தான் இதன் நிர்வாகம் வெறும் வணிக அடிப்படையிலான முடிவுகளை மட்டுமே எடுத்து விட முடியாது. அரசியில் ரீதியாக ஏற்று கொள்ளப்படக் கூடியதாகவும் உள்ளூர் வேலை வாய்ப்பு இழப்பிற்கு காரணமாகி விடாமலும் இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் அதற்கு உள்ளது. மாறாக மிட்டல் நிறுவனமோ லஷ்மி மிட்டல் குடும்பத்தாரிடம் தான் அதிகபட்சமான பங்குகள் உள்ளன.

------------------------------------ மிட்டல் -(ஆர்ஸலர்)
2005 விற்பனை பில்லியனில் ------$28.10-- ($38.84)
ஓராண்டு விற்பனை வளர்ச்சி(%)-- 27 -----(8)
2005நிகர வருவாய் (பில்லியனில்)-- $3.37 --($4.58)
ஓராண்டு நிகர வருவாய் வளர்ச்சி(%)(-28)--(66)
பணியாளர்கள் எண்ணிக்கை 175000-- (96000)
-----------------------------------------------------------

மிட்டலின் முயற்சி :

தற்போது ஆர்ஸலர் நிறுவனத்தின் பங்குகளை கையகப்படுத்தி அந்த நிர்வாகத்தை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர தனது முயற்சிகளை தொடங்கியுள்ள லஷ்மி மிட்டல் இந்த முயற்சிக்கு 18.6 பில்லியன் யூரோக்களை ஒதுக்கியுள்ளார். இந்த முயற்சி இரண்டு நிறுவன பங்குதாரர்களிடையே பலத்த எதிர்பார்ப்பினையும் ஆதரவினையும் பெற்றுள்ளது. ஜனவரி 26ல் இந்த முயற்சி குறித்து மிட்டல் அறிவித்த தினம் முதல் ஆர்ஸலர் பங்குகளின் மொத்த மதிப்பு பல பில்லியன் டாலர் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மிட்டல் இந்த முயற்சிக்கு ஏன் அதிக முக்கியத்துவம் அளிக்கிறார்? முதலில் மேற்கு ஐரோப்பாவில் காலூன்ற இது ஒரு அற்புத வாய்ப்பு. அதே போல ஆர்ஸலர் நிறுவனமும் மிட்டல் நிறுவனத்திற்கு சம பருமனுள்ள நிறுவனம் என்பதால் இதனை கையகப்படுத்தும் பட்சத்தில் உலக சந்தையில் 11 ரூ இந்த இணைந்த நிறுவனத்தின் கையில் வரும். மிட்டலின் மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய பலமும் ஆர்ஸலரின் மேற்கு ஐரோப்பிய பலமும் ஒருங்கிணையும். மிட்டலின் அமெரிக்க பலமும் ஆர்ஸலரின் லத்தீன் அமெரிக்க பலமும் ஒன்றிணையும்.

சரி ஐரோப்பிய அரசுகள் இதனை ஏன் எதிர்க்க வேண்டும் :

முதலில் இது போன்ற ஒரு முயற்சி அறிவிப்பினை மிட்டல் வெளியிட்டதுமே திடுக்கிட்டு விழித்ததைப் போல எழுந்து கொண்டன பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய அரசுகள். முதலில் மேற்கு ஐரோப்பாவின் இரும்பு எஃகு சந்தை ஒரு இங்கிலாந்து இந்தியரின் கட்டுப்பாட்டிற்குள் வரும் என்ற சிந்தனையே அவர்களுக்கு விபரீதமாகப் பட்டது. அதிலும் நிறுவனத்துடன் அது குறித்த பேச்சுவார்த்தை என்ற அறிகுறி கூட இல்லாமல் பங்குதாரர்களிடம் இருந்து பங்குகளை
வாங்க முயற்சித்தது என்பது அவர்களுக்கு மேலும் அதிர்ச்சியளித்தது. வணிக ரீதியாக இது ஒரு வழக்கமான நிகழ்வு தான் என்றாலும் ஏற்கனவே அதிகமான வேலை இழப்பால் உள்நாட்டு எதிர்ப்பினை சம்பாதித்து வரும் ஐரோப்பிய அரசுகள் இந்த விஷயத்தில் பலத்த எதிர்ப்பினை சம்பாதிக்க நேரும்.
மற்றொரு பக்கம் ஆர்ஸலர் நிறுவனத்தின் பங்குதாரர்கள் மிட்டல் நிறுவனத்துடன் இணைவதில் ரொம்பவும் ஆர்வமாக இருக்கிறார்கள். போட்டி மிகுந்த இரும்பு எஃகு துறையில் மிட்டல் போன்ற வணிக தலைவரின் உறுதியான தெளிவான சிந்தனைகள் மூலம் தான் நிறுவன வளர்ச்சி அதிகரிக்கும் என்று கருதுகிறார்கள். ஆக நிறுவன பங்குதாரர்களுக்கும் உள்ளூர் கோபத்திற்கும் இடையே அல்லாடுகின்றன ஐரோப்பிய அரசுகள். ஒரு குடும்ப கட்டுப்பாட்டில் இருக்கும் மிட்டல் நிறுவனம் பல அரசுகளும் தொழிற்சங்கங்களும் முக்கிய பங்கு வகிக்கும் ஆர்ஸலர் நிறுவனம் என இரண்டு நிறுவனங்களுக்கும் கலாச்சாரமே வேறுபடுகிறது. இந்த சூழலில் எந்த தொழில் முறையான திட்டமிடலும் இல்லாமல் மேற்கு ஐரோப்பா சந்தையை கட்டுப்படுத்தும் ஒரே குறுகிய நோக்கத்துடன் மட்டும் ஆர்ஸலர் நிறுவன பங்குதாரர்களை மிட்டல் திசை திருப்பி வருவதாக எதிர்க்கும் ஐரோப்பிய அரசுகள் குற்றம் சாட்டுகின்றன. இந்த விஷயத்தை தங்களது கவுரவ பிரச்சினையாக தான் இவை பார்க்கின்றன.

நாடுகளின் கருத்து :

மிட்டல் லண்டனில் வசிக்கும் வெளி நாட்டு இந்தியர் என்பதால் இந்தியாவும் இங்கிலாந்தும் மிட்டலது முயற்சிக்கு ஆதரவு தெரிவிக்கின்றன. உலகமயமாக்கலின் யதார்த்தத்தை எதிர்ப்பு ஐரோப்பிய நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும் என்று

இங்கிலாந்து கூறியுள்ளது. இந்த விஷயம் குறித்து இந்திய பிரதமரும் பிரான்ஸ் அதிபர் ஜாக்வஸ் சிராக்குடன் பேசியிருக்கிறார். மிட்டல் ஒரு இங்கிலாந்து இந்தியர் என்பதால் தான் இந்த எதிர்ப்பு என்ற இனவெறி குற்றச்சாட்டினை பலமாக மறுத்துள்ளார் சிராக். ஆர்ஸலர் முதன்மை அதிகாரி டாலியோ, மிட்டல் பங்குகளை வாங்க முற்பட்டதற்கு பதிலாக நிர்வாகத்துடன் பேச்சு நடத்தி நிறுவனங்களை இணைக்க முற்பட்டிருக்கலாம் என்று கருத்து கூறியுள்ளார். மிட்டலோ ஒரு இந்திய வணிகராக தனக்கு நேர்ந்த சம்பவங்கள் மற்றவர்களுக்கு நேரும் பட்சத்தில் அது உலகமயமாக்கலுக்கே பின்னடைவு தான் என்று கூறியுள்ளார்.

நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?

உண்மையில் மிட்டலின் முடிவு பல தொழில் கணிப்பு நிபுணர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

ஏனென்றால் இந்தியாவும் சீனாவும் தான் உலகில் அதிக இரும்பு எஃகு தேவை கொண்டதாக இருந்தன. இதன் காரணமாகவே கடந்த 5 ஆண்டுகளில் எஃகு நிறுவனங்களின் உற்பத்தி விலையும், லாபமும் அதிகரித்து வந்தது. ஆனால் கடந்த 50 ஆண்டுகளில் மட்டும் சுமார் 5000 ஆலைகளை உள் நாட்டில் நிறுவியுள்ள சீனா தனது உள் நாட்டு தேவைகளை பூர்த்தி செய்ததோடு அல்லாமல் வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யும் அளவுக்கு உற்பத்தியை பெருக்கி விட்டது. அதன் ஏற்றுமதி அதிகரிக்க அதிகரிக்க உலகின் மற்ற நிறுவனங்கள் உற்பத்தியை குறைத்தாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும்.இது போன்ற கடினமான காலங்களில் ஆள் குறைப்பு மற்றும் செலவின குறைப்பு நடவடிக்கைகளின் மூலம் நிறுவனத்தை நிலை நிறுத்தி கொள்ள மிட்டல் நிறுவனத்தால் முடியும்.
ஆனால் பல அரசாங்க, தொழிற்சங்க தலைவர்களை நிர்வாகத்தில் கொண்டுள்ள ஆர்ஸலர் நிர்வாகத்திற்கு இது சுலபமானதல்ல. வேலை இழப்பு இருக்க கூடாது என்ற காரணத்தால் அதிகப்படியான செலவினங்களினால் நிறுவனம் பலத்த நஷ்ட சூழலுக்கு ஆளாகும். நிறுவனத்தை நடத்த இயலாத சூழல் தோன்றும் அந்த நேரத்தில் மிட்டல் இந்த முயற்சியை மேற்கொண்டிருக்கும் பட்சத்தில் அது சுலபமாகவும் இருந்திருக்கும். ஐரோப்பிய அரசுகளிலும் சாதகமான சூழல் நிலவியிருக்கும் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள்.
அதே சமயத்தில் ஒரு சிறிய நிறுவனமாக தொடங்கி இன்று ஒரு சாம்ராஜ்யத்திற்கே தலைவராக இருக்கும் மிட்டல் நிச்சயமாக இதன் சாதக பாதகங்களை அலசிய பிறகே இந்த முயற்சி மேற்கொண்டிருப்பார் என்பதையும் இவர்கள் ஒப்பு கொள்கிறார்கள்.


கடந்த சில நாட்களில் அனைத்து தரப்புகளுமே தங்களது நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளன. ஆர்ஸலர் நிறுவன பங்குதாரர்களிடம் நல்ல பெயரெடுக்கும் முயற்சியை மிட்டல் நிறுவனம் மேற்கொள்ள லஷ்மி மிட்டல் இந்தியா மூலமும் ஐரோப்பிய நாடுகளுடன் பேச்சு வார்த்தை நடத்துவதன் மூலமும் விரைவில் இந்த கையக முயற்சியை முடிக்க அதிரடியாக செயல்பட்டு வருகிறார். ஆர்ஸலர் நிறுவனமோ விழித்து கொண்டு தங்கள் நிர்வாக திறனில் அவநம்பிக்கை கொள்ள வேண்டாம் என்று கூறி பங்குதாரர்களுக்கு அதிக டிவிடென்டுகளை அறிவித்தும், கனடாவின் டொஃபாஸ்கோ நிறுவனத்தை கையகப்படுத்தியும் பிரச்சினையில் சம நிலை கொண்டு வர முயற்சித்து கொண்டுள்ளது. இந்தியாவும் இங்கிலாந்தும் மேற்கு ஐரோப்பிய அரசுகளை அமைதிப்படுத்தும் முயற்சியில் இறங்க அந்த நாடுகள் செய்வதறியாமல் முழிக்கின்றன.

ஆர்ஸலர் நிறுவனத்தை மிட்டல் நிறுவனம் கையகப்படுத்துவது என்பது லஷ்மி மிட்டல் சொல்வதை போல் ‘தவிர்க்க முடியாதது’ என்பது தான் தற்போதைய உலக மயமாக்கல் யதார்த்தம்.

அமெரிக்காவின் ஆறு துறைமுகங்களை துபாயில் இருந்து செயல்படும் ஒரு துறைமுக பராமரிப்பு நிறுவனத்தின் பராமரிப்பில் விடுவதை (இதற்கு புஷ் தனிப்பட்ட ஆதரவு தெரிவித்ததாக சொல்லப்பட்டாலும் கூட) அமெரிக்க அமைச்சரவை சமீபத்தில் நிராகரித்தது என்பதும் அதேபோல் அமெரிக்க எண்ணெய் நிறுவனம் ஒன்றினை சீன அரசு துணை நிறுவனம் ஒன்று கையகப்படுத்தும் முயற்சியையும் உள் நாட்டு எதிர்ப்பை காரணம் காட்டி அமெரிக்கா முறியடித்ததும் நினைவிருக்கலாம். உலகமயமாக்கல் என்கிற காட்டாற்று வெள்ளத்தை கட்டவிழ்த்து விட்ட அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் இன்று அதனை மிரட்சியுடன் பார்ப்பதை ‘காலத்தின் விளையாட்டு’ என்பதை தவிர வேறென்ன சொல்ல முடியும்.


வெப் உலகத்தில் இந்த கட்டுரைக்கான இணைப்பு இங்கே :
http://www.webulagam.com/news/parimanangal/0604/01/1060401009_1.htm .

Monday, February 20, 2006

நிதிஷ் குமார் மோசமான சீரியல்களுக்கு இடையில் நல்ல ஜோக்


நிதிஷ் குமார் மோசமான சீரியல்களுக்கு இடையில் நல்ல ஜோக் என்று ஹிந்து பத்திரிகையில் ஞாயிறன்று வெளியான ஓபன் பேஜ் பகுதியில் பீகாரில் பிறந்து தற்போது சென்னையில் பணியாற்றி வரும் ஐஐடி பேராசிரியர் ஒருவர் தனது மாநிலம் குறித்து கூறியுள்ளார். நிதிஷ் குமார் மட்டுமல்ல யார் முதல்வராக வந்தாலும் பீகாரின் நிலையை மாற்றுவது எளிதான காரியமில்லை என்று கூறியுள்ளார். இது அவரது தாய் மாநில பற்றால் விளைந்த கோபமா? அல்லது பொதுவான சால்ஜாப்பு அவநம்பிக்கையா? என்பதற்கு சில ஆண்டுகள் கழித்து பீகாரின் நிலையை கணித்த பிறகு தான் பதில் சொல்ல முடியும்.
Bihar won't change...
SHREESH CHAUDHARY
Nitish Kumar at best might be a good joke between bad serials
A LOT of people feel that now that we have got rid of Lalu, suddenly everything is going to be all right with Bihar. I say no Nitish or any other Kumar can change Bihar. I may sound cynical, but I have the following reasons to say that Bihar will not change until in Bihar:
* Everyone goes to work at nine and stays there at least until five without grinding and spitting tobacco in the office through the day;
* Everyone helps everyone without worrying about the other person's caste or cash;
* Everyone stops stealing electricity, reports against those still doing so, and pays his bills on time and demands better power supply, in that order;
* Everyone stops playing cards in the day time;
* Everyone is ready to confront crime, regardless of place, time and consequences;
* All railway passengers there pay full fare and buy tickets rather than pay three fourths and travel without ticket;
* All bus passengers demand and obtain a ticket before they pay the fare;
* Doctors first go to the hospital before going to their own private clinic;
* Schoolteachers insist they would much rather teach in the class than close the school for cattle census;
* All teachers stop private tuition and go to class, library and laboratory more enthusiastically than they go for tabulation of examination marks;
* All teachers award marks only after reading the script, rather than on the weight of recommendation behind it;
* All workers contribute national level work before they demand national level pay and perks;
* There is a social boycott of those who have more than their known sources of income;
* All there invest in their daughter's education more than they invest in her dowry and feast on her wedding day;
* Everyone leaves a square foot of space between the road and their house for the drainage rather than encroach it and place another brick upon it;
* Everyone treats a bank loan as capital for investment rather than not to be returned charity for fun;
* All upon retirement return to their villages and reduce the difficulties of life there through their presence and participation, rather than remain stuck in their dark and damp and uncomfortable flats in rurban areas Bihar so abounds in; and, finally,
* Until at least its elite travel the class for which they claim travel allowance.
The quality of people
The difference between any two States is not so much because the Chief Minister of one is a lot better than that of the other; it is because people in one have initiative and enterprise, and those in the other don't; people in one have some sense of shame and pride, in the other don't.
Because all those things I listed above are not going to happen in the foreseeable future I am sure Bihar is not going to change for the next few decades at least. Nitish Kumar at the best might be a good joke between bad serials. Call it cynical if you will!
(The writer, Professor, IIT Madras, is a native of and frequent visitor to Bihar)

Thursday, February 16, 2006

ஈரான் வாக்களிப்பு ஏன் சரி ஏன் தவறு

ஈரான் விஷயத்தை ஐ நாவின் பாதுகாப்பு கவுன்சிலுக்கு அனுப்புவது குறித்த வாக்கெடுப்பில் ஆதரவாக இந்தியா வாக்களித்திருப்பது குறித்து பலத்த சர்ச்சை எழுந்துள்ளது. கம்யூனிஸ்ட் கட்சிகளும் பாரதீய ஜனதா கட்சியும் மத்திய அரசு அமெரிக்க வற்புறுத்தலுக்கு பணிந்திருப்பதாக கருத்து தெரிவித்துள்ளன, நாடாளுமன்றத்தில் இந்த விஷயம் விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்பட வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் கோரியுள்ளன. இந்த விஷயத்தில் மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர சமாஜ்வாதி கட்சி திட்டமிட்டு வருகிறது.
கொஞ்ச நாட்களாக கொள்கைகளை காற்றில் பறக்க விட்டு ஆளும் அரசை கண்மூடித்தனமாக எதிர்ப்பதில் கவனம் செலுத்திய பாரதிய ஜனதா கட்சியும் தற்போது ஆர் எஸ் எஸ்ஸின் கண்டிப்பிற்கு பிறகு திடீர் ஞானோதயமாய் இந்த விஷயத்தில் அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

எந்த சூழலில் இந்தியா ஆதரவாக வாக்களித்திருக்க வேண்டும், அமெரிக்க எதிர்ப்பு என்பதை தவிரவும் இந்த விஷயத்தில் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய விஷயங்கள் என்ன என்பது குறித்து கொஞ்சம் ஆராயலாம்.

ஈரான் அதிபர் மீது ஏற்கனவே ஒரு குற்றச்சாட்டு இருந்தது நினைவிருக்கலாம். 1979 நவம்பர் 4ம் தேதி அமெரிக்க தூதரகம் முற்றுகையிடப்பட்டு அங்கிருந்தவர்கள் பணய கைதிகளாக சுமார் 444 நாட்கள் வைக்கப்படிருந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட மாணவர்கள் குழுவின் தலைவராக இவர் இருந்ததாக பணய கைதிகள் சிலர் குறிப்பிட்டிருந்தது நினைவிருக்கலாம். அந்த விவகாரம் உண்மையோ இல்லையோ ஆனால் அவர் ஒரு தீவிரமான செயல்பாட்டு சித்தாந்தம் கொண்டவர் என்பது அடுத்த சில மாதங்களிலேயே நிரூபணமானது. யூத படுகொலை என்பது இட்டுக்கட்டப்பட்ட கற்பனை என்ற அவரது வாதம் மேற்கு நாடுகளில் அதிர்ச்சி அலையை உண்டு பண்ணியது. மேற்கு ஆசிய அமைதி நடவடிக்கைகளுக்கும் அச்சத்தை தோற்றுவித்தது. இப்படி ஒரு சிந்தனையாளர் தான் திடீரென்று அணுசக்தி அணுஆயுதம் என்று பேசினால் உலக அமைதி கருதும் யாருக்கும் ஒரு பயத்தை உருவாவது தவிர்க்க முடியாதது.

இந்த விஷயத்தில் அமெரிக்காவிற்கு எதிர்ப்பு தோன்ற காரணம் அமெரிக்காவுக்கு தனக்கு பிடிக்காத நாடுகள் மீது நொண்டி சாக்கு சொல்லி தாக்குதல் நடத்துவது இயல்பான வழக்கம் என்பதால் இதுவும் அதே போன்றதொரு உள் நோக்கத்துடன் தான் செய்யப்படுகிறது என்ற எண்ணம். எப்படி புலி வருகிறது புலி வருகிறது என்று சும்மா சும்மா பயமுறுத்துபவன் உண்மையில் புலி வரும் போது சொன்னால் கூட நம்ப மாட்டார்களோ அப்படி ஆகி விட்டது அமெரிக்க நிலைமை.நம்ம ஊர் ஆட்களை பொறுத்த வரை அமெரிக்காவை எப்பொழுதுமே சந்தேக கண் கொண்டு தான் பார்ப்பார்கள். இந்த விஷயத்திலும் அதே போன்ற கண்ணோட்டத்திலேயே இந்த பிரச்சினையை பார்க்கிறார்கள். ஆனால் ஒரு தீவிர சிந்தனையாளரின் கையில் அதுவும் அவர் உக்கிரமான மன நிலையில் உள்ள போது அணு ஆயுதம் போனால் என்ன ஆகும் என்று சிந்திக்க தவறி விடுகிறார்கள்.

அவர்களது அடுத்த குற்றச்சாட்டு இந்தியா நடு நிலையில் இருந்து தவறிவிட்டது என்பது. அதாவது இவர்களை பொறுத்த வரை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இருந்திருந்தால் இந்திய நடு நிலைமை காப்பாற்றப்பட்டிருக்கும் என்பது இவர்களின் வாதம். இவர்களே இந்தியா வல்லரசாக வேண்டும் என்று முழக்கமிடுவார்கள். முக்கிய பிரச்சனைகளில் கூட முடிவு எடுக்க முடியாதவன் எப்படி வல்லவனாக முடியும். நடு நிலை காப்பாற்றுகிறேன் என்று வேஷம் போட்டால் இந்தியாவின் வலிமை வளர்ச்சி பெற்றுள்ளதை என்று தான் உணர்த்த முடியும். இந்த உணர்த்தும் நோக்கில் தான் சுனாமி பேரழிவின் போது அன்னிய நிதி உதவியை இந்தியா மறுத்தது என்பது யோசிக்க வேண்டிய விஷயம்.

அதேபோல் இப்போது ஈரானுக்கு எதிராக பெரிய நடவடிக்கை ஒன்றும் எடுக்கப்பட்டு விடவில்லை. இந்த பிரச்சினை பாதுகாப்பு கவுன்சிலின் முன் வைக்கப்படுவதற்கு தான் வாக்களிக்கப்பட்டிருக்கிறது. இது ஈரான் மீது அமெரிக்க தாக்குதலுக்கு முன்னேற்பாடு என்று கருதுபவர்கள் இப்போது சூழல் மாறிவிட்டதை உணர்ந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் ஈராக் மீது தாக்குதல் நடத்திய விஷயத்திலேயே வெளியேயும் வர முடியாமல் உள்ளேயும் இருக்க முடியாமல் சூடுபட்ட பூனையாக முழிக்கிறது அமெரிக்கா. அதனால் தான் ஈரான் பிரச்சினையில் உலக நாடுகளின் துணையை தேடி அலைபாய்கிறது.

ஈரான் விஷயத்தில் உலக நாடுகளின் போக்கினை இரண்டு முக்கிய விஷயங்கள் தீர்மானிக்கிறது. ஒன்று எண்ணெய் விவகாரம், மற்றொன்று இஸ்லாமிய நாடு அமெரிக்காவினால் நிர்ப்பந்திக்கப்படுகிறது என்ற விவகாரம். இரண்டுமே விவகாரமான விவகாரங்கள் தான். இந்தியா உள்ளிட்ட நடு நிலை நாடுகள் எண்ணெய் விவகாரத்தில் கவனமாக இருக்க வேண்டியதன் அவசியத்தை மறுக்க முடியாது. ஏனென்றால் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை நிர்ணயிக்க கூடிய முக்கியமான அம்சமாக கச்சா எண்ணெய் மாறி விட்டது. ஆனால் அதற்காக உலக அமைதியை பணயமாக வைக்க முடியுமா?
சரி அப்படியென்றால் இந்த வாக்களிப்பில் என்ன தவறிருக்கிறது என்கிறீர்களா? தவறு ஒன்றுமில்லை. ஆனால் நாம் மேலே சொன்ன எண்ணங்களுடன் தான் இந்த வாக்களிப்பு செய்யப்பட்டிருக்கிறதா அல்லது அமெரிக்க நிர்ப்பந்தத்திற்கு இந்தியா அடி பணிய துவங்கியிருக்கிறது அல்லது அமெரிக்காவை நோக்கிய இளகிய மனம் காட்டும் மன் மோகன் சிங் அரசின் குருட்டுத்தனமான நடவடிக்கை என்ற கம்யூனிஸ்ட் கட்சிகளின் கூற்றினை போல நடந்தேறியிருக்கிறதா என்பது தான் இப்போது கேள்வி.

ஏனென்றால் அமெரிக்கா இப்போது பலவீனமடைந்து கொண்டே வருவது கண்கூடாகி விட்ட சூழ் நிலையில் துணைக்கு ஆசிய நாடுகளை தேட வேண்டிய சூழல் உருவாகி விட்டது. ஏனென்றால் இப்போது இங்கிலாந்து நாட்டிலேயே அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு துணை போக கூடாது என்று எதிர்ப்பு குரல் பலமாக கேட்கின்றது. அதனால் அமெரிக்கா ஐரோப்பிய நாடுகள், இந்தியா என்று முக்கிய உலக சக்திகளை தன்னுடன் சேர்த்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. ஆனால் இதெல்லாம் அமெரிக்காவின் தலைவலி. அதற்கு இந்தியா ஊறுகாயாக முடியாது என்பதை மன்மோகன்சிங் அரசு புரிந்து கொண்டிருந்தால் சரி. ஏனென்றால் சீனா தான் அதிகம் தலையிட விரும்பாமல் ரஷ்யா சமாதான முயற்சிக்கு தான் ஆதரவளிப்பதாக கூறி ஒதுங்குகிறது. ரஷ்யாவும் அமெரிக்க ஆதிக்கத்தை கட்டுப்படுத்தவும் மற்றும் தன் நலங்களை கருத்தில் கொண்டும் யுரேனியத்தை தான் வளப்படுத்தி தருவதாக கூறிவருகிறது. இது போன்றதொரு சூழலில் தான் இந்தியாவின் வாக்களிப்பினை பார்க்க வேண்டுமே தவிர அமெரிக்க எதிர்ப்பு என்ற ஒரே ஒரு கண்ணாடியை கொண்டு அத்தனை காட்சிகளையும் பார்க்கத் துவங்கினால் அமெரிக்காவினால் அதிகம் பாதிப்படைந்தது நாமாக தான் இருப்போம்.

இந்த விஷயத்தில் பாராளுமன்ற விவாதத்திற்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் கோரியுள்ளன. அதன் போது இந்த கேள்விகளுக்கான விடைகள் தெரிய வரும். அப்போது அந்த விவாதம் இந்தியா மட்டுமன்றி உலக நாடுகள் அத்தனையும் உற்று நோக்கும் அதி முக்கிய சிந்தனை விவாதமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Wednesday, January 25, 2006

தேர்தலே கடந்து போ

தமிழகத்தில் தேர்தல் ஜூரம் துவங்கி விட்டது. அரசு அதிகாரிகள், பொதுமக்களுக்கு சலுகைகளை வாரி வழங்கி திடீரென்று திருந்தி நல்ல பிள்ளையாகி விட்டது ஆளும் ஜெயலலிதா அரசு. ஞாபகமறதி அல்லது மன்னிக்கும் குணத்திற்கு பெயர் போன நமது மக்களும் அரசின் தவறுகளை மன்னித்து அதற்கு பொது மன்னிப்பு தந்து விட்டார்கள் என்றே அவர்களது மனப்போக்கும் கருத்துக்கணிப்புகளும் எடுத்துக் காட்டுகின்றன.

எதிர்க் கூட்டணியையும் அதன் மூலம் கலைஞரையும் கலகலக்க வைக்கும் நோக்கில் அடுத்தடுத்து பல அதிரடி மூவ்களை செய்து வருகிறார் ஜெயலலிதா. அவரின் சில தந்திரங்கள் பலிக்க ஆரம்பித்த்துள்ளன என்பதனை மதிமுகவின் திடீர் மனமாற்ற நடவடிக்கைகள் எடுத்துக் காட்டுகின்றன. சூட்டோடு சூடாக கேபிள் தொலைக்காட்சி வழங்கும் சில எம் எஸ் ஓக்களை கைப்பற்றும் நடவடிக்கை என்று சன் டிவி குழுமத்தின் சுமங்கலி கேபிள் விஷன் மீது குறிவைத்து தனது தாக்குதலை தொடங்கியிருக்கிறார். இது ஏன் மக்களால் வரவேற்கப்படும் என்பதையும் பல்வேறு அறிக்கைகள் மூலம் விளக்கி இது ஒரு ஜனரஞ்சகமான முடிவு என்பதையும் கூறி வேட்டு வைத்துள்ளார். தமிழகத்தில் அதிக பேரால் வாசிக்கப்படும் காலை நாளிதழான தினத்தந்தியின் ஆதரவும் ஜெயலலிதாவுக்கு கிடைத்து இருப்பதால் இந்த முடிவு நிஜமாகவே மக்களுக்கு பயனளிக்கக் கூடிய ஒன்று என்பதை மக்களும் நம்பத் தொடங்கி விட்டார்கள். கம்யூனிஸ்ட் கட்சியினரும் இதனை போன்றே தனியார் வசம் இருக்கும் பல துறைகளும் அரசு வசம் வர வேண்டும் என்று கிளம்பி விட, பாவம் கலைஞர் அவர் அவசர அவசரமாக கவர்னரை பார்த்த விஷயம் கூட இப்போது உரிமை மீறல் பிரச்சினையாக நிற்கிறது.

நெல்லிக்காய் மூட்டை அவிழ்ந்து விடுமோ என்பது போன்று கவலை கலைஞருக்கு. ஒரு பக்கம் விஜயகாந்த் இவரை மட்டும் குறிவைத்து தாக்குதல் நடத்தினாலும், அவருக்கு கூடும் கூட்டத்தை வைத்து இவர் அவசரப்பட்டு கருத்து கூறாமல் அடக்கி வாசிக்க வேண்டியிருக்கிறது. இன்னொரு புறம் , ‘குறைவாக கொடுத்தால் தானே கூட்டணி மாறுவார்கள், இதுவரை அவர்கள் இந்த கூட்டணியில் தான் இருப்பதாக கருதுகிறேன்’ என்று மதிமுகவினை யோசனையுடன் பார்க்க வேண்டியிருக்கிறது. திடீரென்று பாமக எம் எல் ஏக்கள் 2 பேர் அதிமுகவில் சேர்ந்திருப்பதாலும், நுழைவுத்தேர்வு ரத்து என்ற நீண்ட நாளைய பாமக கோரிக்கை நிறைவேறியிருப்பதாலும் பாமக நமது அணியிலேயே தொடருமா? என்பதிலும் அப்படியே அவர்கள் கூட்டணியில் இருக்க சம்மதித்தாலும் எக்கச்சக்கமான இடங்களை கேட்காமல் இருக்க மாட்டார்களே என்ற கவலை ஒருபுறம். சென்ற பாராளுமன்ற தேர்தலை அடுத்து பிரச்சினையல்லாமல் அடுத்த சட்டமன்ற தேர்தலில் நாம் தான் ஆட்சியை பிடிப்போம், ஸ்டாலினுக்கும் நல்ல அரசியல் அடித்தளம் அமைத்துக் கொடுக்க இயலும் என்று நினைத்தார். ஆனால் நினைச்சது ஒண்ணு, நடந்தது ஒண்ணு, அதனாலே முழிக்குது அம்மா கண்ணு என்பதை போல இப்போது கணக்குகள் மாறியதால் சிந்தனை செய்கிறார்.

இது இப்படியென்றால் பாமக என்ன நினைக்கிறது என்றே தெரியவில்லை. ஏனென்றால் திடீரென்று மீடியாக்களுக்கு எதிராக தாங்கள் நடக்கவில்லை என்று பேட்டி அளித்து சினிமா போராட்டங்களுக்கு ஒரு திடீர் முற்றுப்புள்ளி வைத்தார். தாங்கள் உறுதியாக திமுக கூட்டணியில் தான் இருப்போம் என்று அவர் கூறியிருந்தாலும் யாருமே அவரை முழுமையாக நம்பாததில் அவருக்கு எரிச்சல் இருக்கிறது. இதனிடையே வட மாவட்டங்களில் பாமக வாக்குகளை கணிசமாக விஜயகாந்த் பிரிப்பார் என்று வரும் கணிப்புகளை கண்டு கொள்ளாதவர் போல் இருக்கிறார். அந்த அளவில் முழுமையாக எண்ண ஓட்டத்தினை புரிந்து கொள்ள முடியாத கட்சியாக இருப்பது பாமக மட்டுமே.

மதிமுக ஏறக்குறைய அதிமுக கூட்டணிக்கு வந்து விடும் என்றே சகிம்ஞைகள் தெரிவிக்கின்றன. மதிமுக 2ம் கட்ட தலைவர்கள் எல்லாம் கட்சிகள் குறைவாக இருக்கும் அதிமுக கூட்டணியில் அதிக இடங்கள் கிடைக்கும் என்று கணக்கு போடுகிறார்கள். இப்போது அரசுக்கு ஆதரவும் பெருகி இருப்பதால் இது ஒரு நல்ல வாய்ப்பு என்று கருதுகிறார்கள். ஈரத்துணி போட்டு எங்களை மூட முடியாது என்று பேசுகிறார்கள். அவரை ஜெ அரசு உள்ளே வைத்தது குறித்து கேட்டால் ‘கலைஞர் கொலைப்பழி சுமத்தினார், அவருடன் மீண்டும் கூட்டு வைக்கவில்லையா?' என்று எதிர்க்கேள்வி கேட்கிறார்கள். வைகோவோ தொண்டர்கள் மனமறிந்து முடிவெடுப்பேன் என்று கூறி புதிருக்கு புதிரால் விடையளிக்கிறார். அவருக்கு என்ன பயம் என்றால் சட்டமன்ற கணக்குகளை மனதில் வைத்து தான் மத்திய அமைச்சரவையில் பங்கேற்பதில்லை என்ற முடிவிற்கு வந்தார். இப்போது ஜாதி ரீதியாக மதிமுக வாக்குகளை விஜயகாந்த் பிரிக்க கூடும் என்ற கருத்து நிலவும் நேரத்தில் அதிகபட்சமான சட்டமன்ற தொகுதிகளை கைப்பற்றுவதன் அவசியத்தை அவர் உணர்ந்துள்ளார். இன்றைக்கு கட்சி ஆரம்பிப்பவர்கள் எல்லாம் அதிகாரம் கைப்பற்றும் ஆசை கொள்ளும் போது அவருக்கு மட்டும் அது இருக்காதா என்ன?

விஜயகாந்த் தன்னுடைய வியூகத்தை வெகு தெளிவாக சொல்லி விட்டார். பொதுவாகவே அரசியல்வாதிகளுக்கு இருக்கும் எதிர்ப்பினை கொண்டு லஞ்சம் ஊழலற்ற அரசு என்ற கோஷத்தினை முன்வைத்து ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு நம்மால் சாதிக்க முடியும் என்று அவர் நம்பினார். ஆனால் இப்போது அரசு சலுகைகளுக்கு பின் மக்கள் மனோ நிலை மாறியுள்ளதை அவரால் உணர முடிகிறது. இதனிடையே மண்டபத்தை இடிக்கிறேன் என்று மத்திய அரசு கிளம்பியிருப்பதால் அவர் அதனை எதிர்க்க ஆளும் ஜெ கூட்டணியில் சேரலாம் என்று சிலர் கூறுகிறார்கள். திமுக கூட்டணியையும் கலைஞரையும் கடுமையாக விமர்சிக்கும் அவர் ஜெயலலிதா குறித்தோ ஆளும் அரசு குறித்தோ அதிகம் விமர்சிக்காமல் வாய்ப்புகளை திறந்து வைத்துள்ளார்.

இவர்கள் கணக்குகள் எல்லாம் இப்படி இருக்க பாமரர்களின் மனோ நிலையோ ஆளும் அரசின் பக்கம் லேசாக சாயும் நிலையில் இருக்கிறது. தன்னுடைய பணம் தான் தனக்கு கொடுக்கப்படுகிறது என்றாலும் கூட கொடுக்கப்ப்படும் 1000 அல்லது 2000 ரூபாய் அவர்களது மனோ நிலையில் உண்டாக்கும் மாற்றம் தமிழகத்தில் இலவசங்களின் மவுசினை குறைப்பது அவ்வளவு எளிதானதல்ல என்பதை நமக்கு உணர்த்துகிறது. சுய உதவிக் குழுக்கள் கிராம பெண்களிடையே ஆளும் அதிமுக அரசுக்கு அதிக வரவேற்பினை பெற்று தந்துள்ளது என்பது உண்மை.

நாட்டு நலம் விரும்பிகள் நடு நிலையாளர்களை பொறுத்த வரை இந்த சூழ் நிலை பெரும் பணக்காரர் சாக கிடக்கும்போது இருக்கும் சூழல் தான் இது. உறவுக்காரர்கள் எல்லாம் வந்து அவரது அருமை பெருமைகளை பேசி நிற்பார்கள். மறு நாள் அவர் இறந்ததும் ஒப்பாரி வைத்து துயரக் கடலில் மூழ்கும் அவர்கள் ஒப்பாரி சத்தம் ஓயும் முன் அவரது சொத்துக்கு சண்டையிட்டு நிற்பார்கள். அவர்களது பாசமெல்லாம் பணத்திடமும் பதவியிடமும் தானே தவிர உண்மையல்ல என்பது ஊரறிந்த ரகசியம்.

சும்மாவே நாடகதாரிகள். இதில் ஜாக்பாட் பரிசு என்றால் கேட்கவா வேண்டும். மாற்றி மாற்றி அறுவை சிகிச்சை செய்து இவர்கள் முகமே கிழிந்து விட்ட போதும் முகமூடியை மாட்டி கொண்டு வந்து நாடகமாட மறவாத வெட்கம் கெட்டவர்கள். இதுவும் கடந்து போம் என்று ஒரு சொல் வழக்கு உண்டு. தேர்தல் விரைவில் வரட்டும், இவர்கள் நாடகம் விரைவில் ஓயட்டும், செயற்கை பீதிகளில் இருந்து விடுவித்து மக்களை தங்களது இயல்பு வாழ்க்கைக்கு இவர்கள் அனுமதிக்கட்டும். தேர்தலே போ, போ. கடந்து விரைவில் போ.

Friday, January 13, 2006

பொங்கல் வாழ்த்து

இந்த பொங்கலை இந்திய விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கொண்டாட பல காரணங்கள் இருக்கிறது. மாறி வரும் இந்திய பொருளாதார சூழலுக்கேற்ப இந்திய கிராம சூழலும் மாறி வருகிறது. வரும் பட்ஜெட்டிலும் கிராமப்புற வளர்ச்சிக்கு அதிக நிதி ஒதுக்க இருப்பதாக நிதி அமைச்சர் சிதம்பரம் அறிவித்துள்ளார். நீர் உயர வரப்பு உயரும், வரப்பு உயர நெல் உயரும், நெல் உயர அரசன் உயர்வான் என்று ஒரு பழந்தமிழ் பாட்டு உண்டு. விவசாயி சிறப்பாக இருக்கும் நாடு சுபிட்சம் பெறும் என்பது இயல்பு. விரைவில் அந்த நிலையை இந்தியாஅடைய வேண்டும். எனது பொங்கல் வாழ்த்து கவிதையை இங்கே காணலாம்.

http://sangathamizh.blogspot.com/2006/01/blog-post.html

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.